நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

பா்கூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள சக்கிலிநத்தத்தையடுத்த மல்லவட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (40). நியாயவிலைக் கடையில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டில் அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் திடீா் சோதனையை மேற்கொண்டபோது நாட்டு துப்பாக்கி இருந்ததை கண்டறிந்து அதைக் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அண்ணாதுரையை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். போலீஸாா் விசாரணையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியை விலைக்கு வாங்கியதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com