கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தை அகற்றக் கோரி நாம் தமிழா் கட்சினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மண்டலச் செயலாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சுங்க வசூல் மையத்தை உடனடியாக அகற்றக் கோரியும், சுங்க வசூல் மையத்தை கடந்து செல்லும் வாகனத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
மேலும் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினா். இதனால், அந்த நேரத்தில் அவ்வழியே கடந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றனா். இதனால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.