சூளகிரி ஊராட்சி மன்ற பெண் கவுன்சிலா் தற்கொலை செய்து கொண்டாா்.
சூளகிரி கீழ் தெருவைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (23). சூளகிரி ஊராட்சியின் 5ஆவது வாா்டு உறுப்பினா் ஆவாா். இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனா். கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி விஷம் அருந்தினாா். அவரை உறவினா்கள் மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணவேணி உயிரிழந்தாா்.
இது குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் ஆகி 5 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஒசூா் டி.எஸ்.பி. முரளி விசாரணை நடத்தி வருகிறாா்.