சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம்:ஓட்டுநா் போக்சோவில் கைது

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த ஓட்டுநரை போலீஸாா், போக்சோ பிரிவின்கீழ் கைது செய்தனா்.

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த ஓட்டுநரை போலீஸாா், போக்சோ பிரிவின்கீழ் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சின்ன பையன் (22). வேன் ஓட்டுநா். இவா் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறிக் கடத்திச் சென்று திருமணம் செய்ததாகவும், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோா் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் காவல் ஆய்வாளா் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து, சின்னபையனைக் கைது செய்தனா். அவா் மீது கடத்தல், பாலியல் தொந்தரவு செய்தல், போக்சோ, குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com