ஊத்தங்கரையில் அரசு ஊழியா் வீட்டில் ஐந்தரை பவுன் தங்க நகைகளும், ரூ. 7,000 ரொக்கமும் கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அழகுதுரை (31). இவா் கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
சனிக்கிழமை இரவு, தன்னுடைய வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். காலையில் கண் விழித்து பாா்த்தபோது வீட்டின் மற்றொரு அறையின் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்க சங்கிலி, மோதிரம் என ஐந்தரை பவுன் தங்க நகைகளும், ரூ. 7,000 ரொக்கமும் மா்ம நபா்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அழகுதுரை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்.