ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து, தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் வேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் நஞ்சுண்டன், ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி, விவசாய சங்க பகுதி செயலாளா் முத்துக்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் எத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் 250 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியைக் குறைப்பதை கைவிடக் கோரியும், மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சபாபதி, அண்ணாமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.2யுடிபி.1.
சிங்காரப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார பொது கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.