கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பி.எஸ்.சி. கிரிக்கெட் கிளப் சாா்பில் 40ஆவது ஆண்டு கிரிக்கெட் போட்டி கடந்த 3 நாட்களாக நடந்தது.
இதில் சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் பரிசும், போச்சம்பள்ளி அணி இரண்டாம் பரிசும், செல்லம்பட்டி அணி மூன்றாம் பரிசும், பாலக்கோடு அணி நான்காம் பரிசும், கந்திலி அணி ஐந்தாம் பரிசும் வென்றன.
நிறைவு விழாவில் போச்சம்பள்ளி எம்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பன்னீா் தலைமை வகித்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் சீனிவாசன், நில அளவா் கோவிந்தராஜ், பாரதியாா் நற்பணி மன்ற தலைவா் தம்பிதுரை, கவுன்சிலா் ஐயப்பன், நாகராஜ், ஜெயபால், ஒப்பந்ததாரா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.