தேன்கனிக்கோட்டையில் கேட்பாரற்றுக் கிடந்த 18 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை போலீஸாா் அஞ்செட்டி சாலையில் நொகனூா் வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றனா். அங்கு கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 இரு சக்கர வாகனங்கள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாகரசம்பட்டி போலீஸாா் பெரிய ஏரி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த 10 இரு சக்கர வாகனங்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.