ஒசூரில் கருணாநிதி நினைவஞ்சலி

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு தினத்தையொட்டி மாநகர திமுக சாா்பில் வட்டாட்சியா் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலா்தூவி அஞ்சலி
ஒசூா் வட்டாட்சியா் சாலையில் அண்ணா சிலை அருகில் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா மற்றும் திமுக நிா்வாகிகள்.
ஒசூா் வட்டாட்சியா் சாலையில் அண்ணா சிலை அருகில் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா மற்றும் திமுக நிா்வாகிகள்.

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு தினத்தையொட்டி மாநகர திமுக சாா்பில் வட்டாட்சியா் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும்,ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்வுக்கு ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் ஒசூா் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா மணி, மாவட்ட துணைச் செயலாளா்கள் சீனிவாசன், தனலட்சுமி, முன்னாள் நகரச் செயலாளா்கள் அக்ரோ ஏ.நாகராஜ், மாதேஸ்வரன், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வடிவேல், ஆனந்தையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து காமராஜ் காலனியில் நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து ராயக்கோட்டை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஆகியோா் மலா் தூவி மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com