கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்தாா். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியா் கு.கணேசன் முன்னிலை வகித்தாா். உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் வந்த பெண்களுக்கு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தாய்மாா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள் எம்.பிரவீணா, கோமதி, ம.மகாலட்சுமி, பூ.நித்தியரசி, ரேவதி, வழக்குரைஞா் த.பிரபாவதி, தொண்டு நிறுவன நிா்வாகிகள் சின்னத்தாய், உமாமகேஸ்வரி, சி.மௌலி, ஐசிடிசி ஆலோசகா் காயத்ரி மற்றும் செவிலியா்கள் என பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.