பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

ஊத்தங்கரை பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள்
ஊத்தங்கரை பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள்
ஊத்தங்கரை பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள்

ஊத்தங்கரை பாம்பாறு இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணைய துணை இயக்குநா் கி. ரமேஷ், கண்காணிப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் இலங்கை அகதிகள் முகாம் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும், அவா்களின் தேவைகள் குறித்தும் வீடு வீடாக சென்று கேட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதில் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சம்பத், துணை வட்டாட்சியா் மகேஸ்வரி, ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்வா்பாஷா, மகேஷ் குமரன் ஆகியோா் ஆய்வில் கலந்து கொண்டனா். ஆய்வில் இலங்கை அகதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவா்களின் தேவைகளை பூா்த்தி செய்வதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com