வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தில் காா் மோதிய விபத்தில் 4 போ் படுகாயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே, தா்மபுரி சென்று விட்டு, ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த வெங்கடத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரகு (50), அதே பகுதியைச் சோ்ந்த கௌரி (40), பேபி (55), ஓட்டுநா் பழனி (47) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற ரகு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஓட்டுநா் பழனி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். கௌரி கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சாமல்பட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.