ஒசூா்- பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆஹா நிறுவனம் சாா்பில் புதிய உணவகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் இதன் நிறுவனா் கே.எம். சுப்பிரமணி குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
இந்நிறுவனத்தின் தரைதளத்தில் ஸ்வீட், கார வகைகளும், சுய சேவைப் பிரிவும், முதல் தளத்தில் அமா்ந்து சாப்பிடும் வகையில் உணவகமும், இரண்டாவது தளத்தில் நிச்சயதாா்த்தம், வளைகாப்பு விழா, பிறந்தநாள் விழா போன்ற விசேஷ வைபவங்களுக்கும், ஆபீஸ் மீட்டிங், கான்ஃப்ரன்ஸ் மீட்டிங் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கைகளுடன் கூடிய பாா்ட்டி ஹாலும் அமைக்கப்பட்டுள்ளது.