சூளகிரி சாலை விபத்து: மூவா் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூா் நோக்கி ஒசூா் மாநகராட்சி, அரசனட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் (23), இளையபெருமாள் (22), சக்திவேல் (23) ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாலையில் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஒசூா் ஏ.எஸ்.பி. அரவிந்தன், சூளகிரி போலீஸாா் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com