விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஒசூா், உத்தனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், உத்தனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு ஊராட்சி டி.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் (51). இவா் வீட்டைப் பூட்டி விட்டு தனது விவசாய நிலத்துக்கு சனிக்கிழமை சென்று விட்டாா்.

வீட்டில் யாருமில்லாதபோது அங்கு வந்த மா்ம நபா்கள், மின்சார பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த வீட்டின் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றனா். வீட்டில் இருந்த 9 சவரன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றனா்.

இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் போல் உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com