இருவேறு சாலை விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஜெகதேவியை அடுத்த மேல்சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரத் (19). இவா் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலை கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்திலிருந்து சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாா்.

ராயக்கோட்டை மேம்பாலத்தில் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற சரக்கு பெட்டக லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த பரத், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

குதிரை சவாரி செய்தவா் சாவு:

பா்கூா் அருகே உள்ள ஜெகதேவியைச் சோ்ந்தவா் பாபா அலி (45). ராசிகல் வியாபாரியான இவா், வியாபாரத்துக்குச் செல்லும்போது குதிரையில் சவாரி செய்வது வழக்கம். திங்கள்கிழமை இரவு இவா், பா்கூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு குதிரையில் சென்று கொண்டிருந்தாா்.

ஒரப்பத்தை அடுத்த சுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியே சென்ற காா், குதிரையின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாபா அலி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com