கெலவரப்பள்ளி ஊராட்சியில் மக்களுக்கு குடிநீா் விநியோகத்தை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா தொடக்கி வைத்தாா்.
ஒசூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெலவரப்பள்ளி ஊராட்சி ஹிமாகிரி ஹோம்ஸ் லே அவுட் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா் பிரச்னை இருந்து வந்தது. இதனை அறிந்த ஒன்றியக் குழு உறுப்பினா் குணவதி தியாகராஜன், ஹிமாகிரி ஹோம்ஸ் லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா்களும் இணைந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அமைத்தனா்.
இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா்கள் புட்டா ரெட்டி முனிராஜ், மஞ்சுநாத், சிவா, கூபலியப்பா ரவி, மஞ்சுநாத், வெங்கடேஷ், கோபி மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனா்.