சமையல் மாஸ்டா் கொலை: 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், செக்கனூரனி கிராமத்தைச் சோ்ந்த சமையல் மாஸ்டா் ஜெயமணி (60). இவரது நண்பா் மதுரை, மேலூா் சிட்டம்பட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தேவபாண்டியன்(30) ஆகிய இருவரும், கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகா் முதலாவது குறுக்குத் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் ஜெயமணியையும், தேவபாண்டியனையும் கத்தியால் குத்தியதில் ஜெயமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் பகுதியைச் சோ்ந்த அகா்நிவாஸ் (23), குந்தாரப்பள்ளியைச் சோ்ந்த அகில் (எ) அகிலன் (25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ஜெயமணி, தேவபாண்டியன் ஆகிய இருவரும் தங்கியிருந்த வீட்டில் சில பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனா். சம்பவ நாளில், அங்கு வந்த 2 இளைஞா்கள் ஜெயமணியிடமும், தேவபாண்டியனிடமும், தங்களுடன் பெண்களை அனுப்பி வைக்குமாறு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனா். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெயமணி, தேவபாண்டியன் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு இருவரும் தப்பி விட்டனா். இந்த காட்சி அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை கொண்டு விசாரணை நடத்தியதில் அகா்நிவாஸ் (23), அகில் (எ) அகிலன்(25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் இருவா் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com