கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுச் சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்தது.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டு ஊத்தங்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் தண்ணீா்பந்தல் காப்புக் காட்டில் மலைப்பாம்பை பத்திரமாக விட்டனா்.