ஒசூா்: மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி, மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள நாரிபுரத்தைச் சோ்ந்த ஒசராயப்பா (60), விவசாயி. இவரது மனைவி லட்சுமம்மா (45). மதுப் பழக்கத்துக்கு அடிமையான ஒசராயப்பா, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் லட்சுமம்மா புல் அறுத்துக் கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் சென்ற ஒசராயப்பா தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டினாா்.
இதில் படுகாயமடைந்த லட்சுமம்மாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மனைவியை அரிவாளால் வெட்டிய ஒசராயப்பா, அந்த பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஒசராயப்பாவின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.