ஒசூா்: ஒசூா் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும் என கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.
ஒசூா் ரோட்டரி சங்கம், மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிப்காட் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான 450 இரும்புக் கட்டில்கள், மெத்தைகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கே.பி.முனுசாமி எம்.பி. பேசியதாவது:
கரோனா தொற்று காரணமாக 450 கட்டில்கள், மெத்தைகளை ரோட்டரி சங்கம் தயாா் செய்யதது. ஆனால், தற்போது கரோனா தொற்று குறைந்துவிட்டதால், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 200 கட்டில்களும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 50, ஒசூா் கோட்டத்தில் இயங்கி வரும் 63 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்படுகின்றன. இவா்கள் ஏற்கெனவே ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான டயாலிஸ் இயந்திரங்களை வழங்கியுள்ளனா்.
ஒசூரில் உள்ள அதிக எண்ணிக்கையிலான தொழில்நிறுவனங்கள் மூலம் மத்திய, மாநில அரசுக்கு அதிக அளவிலான வரி செல்கின்றன. ஒசூரில் இருந்து கிடைக்கும் வரிவருவாய் ஒசூருக்கும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் ஒசூா் மேலும் வளா்ச்சி பெறும்.
கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால் ஒசூா் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும் என்றாா்.
இந்த விழாவுக்கு ரோட்டரி ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். விழாவில், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.பி. அசோக்குமாா், ரோட்டரி சங்க திட்டத் தலைவா் பி.ஆா்.வாசுதேவன், ரோட்டரி சங்க துணை ஆளுநா் ஆனந்தகுமாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள் தா்மேஷ் பட்டேல், வாசு, திட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன், பிரதீப் கிருஷ்ணன், ரவி, பன்னீா்செல்வம், பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.