கிருஷ்ணகிரியில் பிப். 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், பிப். 26-ஆம் தேதி, காலை 10 மணிக்கு, வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறாா். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.