உத்தனப்பள்ளி அருகே யானை தாக்கி பெண் காயம்

உத்தனப்பள்ளி அருகே யானை தாக்கி பெண் காயம் அடைந்தாா்.

உத்தனப்பள்ளி அருகே யானை தாக்கி பெண் காயம் அடைந்தாா்.

உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து விரட்டப்பட்ட நீண்ட தந்தம் கொண்ட ஒற்றை யானை சானமாவு பகுதியில் கடந்த சில நாள்களாக சுற்றி வருகிறது.

அந்த யானை டி.கொத்தப்பள்ளி, ஆழியாளம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் சென்று விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் டி.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஹேமலதா (35) என்ற காய்கறி வியாபாரி அதிகாலையில் அந்த பகுதியில் உள்ள புளிய மரம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com