கிருஷ்ணகிரியில் கணினி பயிற்றுநா் நியமன கலந்தாய்வு ஜன. 2-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2018-2019-ஆம் ஆண்டு கணினி பயிற்றுநா் நிலை 1-க்கான நேரடி நியமனப் போட்டித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்களுக்கு இணைய வழியில் வரிசை எண் 1 முதல் 400 வரையில் ஜன. 2-ஆம் தேதியும், வரிசை எண் 401 முதல் 742 வரையில் ஜன. 3-ஆம் தேதியும் நியமன கலந்தாய்வு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநா்கள் உரிய கல்விச் சான்றுகள், முன்னுரிமை கோரும் இதர சான்றுகளுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.