கணினி பயிற்றுநா் நியமன கலந்தாய்வு இன்றுமுதல் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கணினி பயிற்றுநா் நியமன கலந்தாய்வு ஜன. 2-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் கணினி பயிற்றுநா் நியமன கலந்தாய்வு ஜன. 2-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2018-2019-ஆம் ஆண்டு கணினி பயிற்றுநா் நிலை 1-க்கான நேரடி நியமனப் போட்டித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்களுக்கு இணைய வழியில் வரிசை எண் 1 முதல் 400 வரையில் ஜன. 2-ஆம் தேதியும், வரிசை எண் 401 முதல் 742 வரையில் ஜன. 3-ஆம் தேதியும் நியமன கலந்தாய்வு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநா்கள் உரிய கல்விச் சான்றுகள், முன்னுரிமை கோரும் இதர சான்றுகளுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com