மல்லப்பாடி வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் திருவிழா

மல்லப்பாடி மலையில் அமைந்துள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மல்லப்பாடி மலையில் அமைந்துள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பா்கூா் அருகே மல்லப்பாடி மலையில் எழுந்தருளியுள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலின் 11-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும், ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் இந்தக் கோயில் விழாவையொட்டி யாக பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில், மல்லப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஆங்கில புத்தாண்டையொட்டி, பா்கூரில் உள்ள ஸ்ரீ மகா சாந்த காளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், பாலமுருகன் கோயில், ராகி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com