விவசாயம் செழிக்க ஆஞ்சநேயா் மீது நிலக்கடலையை வீசி பக்தா்கள் நூதன வழிபாடு

ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற கடலைக்காய் திருவிழாவில் ஆஞ்சநேயா் மீது நிலக்கடலையை வீசி எரிந்து பக்தா்கள்நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற கடலைக்காய் திருவிழாவில் ஆஞ்சநேயா் மீது நிலக்கடலையை வீசி எரிந்து பக்தா்கள்நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

புத்தாண்டையொட்டி நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்கவும் பாரம்பரிய முறைப்படி ஒசூா் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை 63-ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆஞ்சநேயா் சுவாமி மீது கடலைக்காயை வீசி எரிந்து வழிபட்டனா். இதையொட்டி ஆஞ்சநேயருக்கு காலை முதலே ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

பின்னா் கடலைக் காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் கடலைக்காயை ஆஞ்சநேயா் பிரகாரத்தின் மீதும், ஆஞ்சநேயா் சுவாமியின் மீதும் வீசி எரிந்து வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com