மது குடித்த 2 போ் உயிரிழப்பு

ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.

ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேடரப்பள்ளி முனீஸ்வா் நகரைச் சோ்ந்தவா் சமீட் (41). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சமீட் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் ( 44). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் மரத்தின் கீழ் படுத்துள்ளாா்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். இது குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com