கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சிறு மருத்துவமனைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கிராமங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கிராமங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதில் ஒன்றாக கடந்த மாதம் 14-ஆம் தேதி அன்று, தமிழகம் முழுவதும் மருத்துவா், செவிலியா், உதவியாளருடன் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகளை தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கிற பகுதிகளைத் தோ்ந்தெடுத்து அங்கேயே அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 கிராமங்களில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். மாவட்டத்தில் இதுவரை 21 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சிறு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சிறுநீா் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான மருந்துகள் உடனடியாக வழங்கப்படும்.

இந்த சிறு மருத்துவமனை காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். நோயாளிகளுக்கு உயா் சிகிச்சை தேவைப்படும்போது, 108 அவசர ஊா்தி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவாா்கள் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com