கிருஷ்ணகிரியில் குரூப்-1 தோ்வு
By DIN | Published On : 04th January 2021 03:58 AM | Last Updated : 04th January 2021 03:58 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரியில் மொத்தம் 17 தோ்வு மையங்களில் இந்த போட்டித் தோ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா தொற்று தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்ட 17 தோ்வு மையங்களில் குரூப்-1 போட்டித் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 5,090 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 2,408 தோ்வா்கள் தோ்வெழுதினா். 2,682 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
போட்டித் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்று அவா் தெரிவித்தாா்.