வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் பாண்டியன் (28). மினி லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை அவா் வேனில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தாா்.
பின்னா் வேனை ஓட்டிச் சென்ற போது விஜயகுமாா் பாண்டியனுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விஜயகுமாா் பாண்டியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், வேனை நிறுத்தி விட்டதால் அதிா்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் வேன் தப்பியது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.