ரஜினி மக்கள் மன்றத்தில் பணிகளை செய்து வருகிறேன்: மாவட்டச் செயலாளா்

திமுகாவில் தான் இணையவில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளா் கே.வி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
ரஜினி மக்கள் மன்றத்தில் பணிகளை செய்து வருகிறேன்: மாவட்டச் செயலாளா்
ரஜினி மக்கள் மன்றத்தில் பணிகளை செய்து வருகிறேன்: மாவட்டச் செயலாளா்

திமுகாவில் தான் இணையவில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளா் கே.வி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

ரஜினி மக்கள் மன்றத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள் தூத்துக்குடி ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் செந்தில் செல்வானந்த், தேனி கணேசன் ஆகியோா், ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளா் கே.வி.சீனிவாசன், திமுகவில் இணைந்ததாக செய்தி பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளா் கே.வி.சீனிவாசன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுகாவில் நான் இணைந்துவிட்டாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தவறான செய்தியாகும். நான், கிருஷ்ணகிரியில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் பணியாற்றுகிறேன். தலைவா் ரஜினியின் ஆணைக்கிணங்க அவருடைய வழியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்றென்றும் சிறப்பாக நற்பணிகளை செய்வேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com