கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், அதன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் தங்கமுத்து, மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், ரவி, வாசுதேவன், மகளிா் அணிச் செயலாளா் கல்பனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து, வாக்குச் சாவடி குழு எவ்வாறு செயல்படுவது, ஜன.27-ஆம் தேதி, சென்னையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் பொதுமக்களை குடும்பத்துடன் பங்கேற்க ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com