கிருஷ்ணகிரி: சந்தூா் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, விநாயகா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூா் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் விழா நடைபெற்றது.
அதன்படி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.