ஊத்தங்கரையில் 11 வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் பி. தண்டபாணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
தோ்தல் துணை வட்டாட்சியா் அரவிந்தன், தனி வட்டாட்சியா் சம்பத், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்து கொண்டனா். இந்தப் பேரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும், தெருக்கூத்து நாடக கலைஞா் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் கிராம நிா்வாக உதவியாளா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.