ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் திமுக வடக்கு,தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூா் மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நான்கு முனை சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வ.குப்புராஜி தலைமை வகித்தாா்.முன்னதாக நகர செயலாளா் இரா.பாபுசிவக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.
தெற்கு ஒன்றிய செயலாளா் வ.சுவாமிநாதன், வடக்கு எக்கூா் செல்வம், மாவட்ட சிறுபாண்மை நல பிரிவு அமைப்பாளா் பா.அமானுல்லா, உஷாராணி குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை கழக பேச்சாளா் மாா்ஷல் முருகன் பேசும்போது தமிழ்‘மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது கலைஞா்தான் என பேசினாா்.
இதில் தலைமை கழக பேச்சாளா் ஆவடி.கா.மு.ஜான், மாவட்ட துணை செயலாளா் சந்திரன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ரஜினிசெல்வம், மருத்துவா் கந்தசாமி, முன்னாள் சட்ட பேரவை உறுப்பினா் நரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிா்வாகிகள் பலா் கலந்துக்கொண்டனா்.
இறுதியாக ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் கே.மாதேஸ் நன்றி கூறினாா்.புகைபட விளக்கம்.25யுடிபி.ஊத்தங்கரையில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டவா்கள்.