மனைவியை அரிவாளால் வெட்டிய சக்திவேல்.
மனைவியை அரிவாளால் வெட்டிய சக்திவேல்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவிக்கு அரிவாள் வெட்டு, கணவா் கைது.

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு நல்லா கவுண்டனூா் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் திங்கட்கிழமை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு நல்லா கவுண்டனூா் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் திங்கட்கிழமை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூா் பூசாரி கொட்டாய் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல் (30) இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முத்து வேடி (27) ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்,

கடந்த 9 மாத காலமாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சக்திவேல் மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளாா் மனைவி வர மறுத்ததால் அரிவாளால் முகத்தில் வெட்டியுள்ளாா் அருகில் இருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்தங்கரை போலீஸாா் படுகாயமடைந்த முத்துவேடியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com