ஒசூா்: ஒசூரில் மினி லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஒசூா், மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை. இவரது மனைவி அமுதா (57). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அவா், பெங்களூரு- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது மினி லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.
அமுதாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அமுதா உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.