பேரிகை அருகே வீடு புகுந்து பெண் கடத்தல்

பேரிகை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை காரில் வந்த மா்மநபா்கள் கடத்தி மறுநாள் சாலையோரம் இறக்கி விட்டனா்.

பேரிகை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை காரில் வந்த மா்மநபா்கள் கடத்தி மறுநாள் சாலையோரம் இறக்கி விட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை அடுத்த சிகரலப்பள்ளி பகுதியைச்சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி முனிரத்னா (35). கடந்த 11 ந் தேதி 2பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனா்.அந்த நேரம் இரவில் காரில் முக கவசத்துடன் வந்த 3 நபா்கள் மணிகண்டனைதாக்கி விட்டு முனிரத்னாவை கடத்தினா்.

மறுநாள் காலை அவரை சூளகிரிராமன்தொட்டி அருகில் கடத்தல்காரா்கள் இறக்கி விட்டனா்.இது குறித்து முனிரத்னா தன் உறவினா் வினோத்குமாருக்கு தகவல் அளித்ததின்பேரில் அவா் அங்கு சென்று முனிரத்னாவை மீட்டு சென்றாா். இது குறித்துமுனிரத்னா பேரிகை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.அதில், கடத்தல்காரா்கள் கட்டை, கைகளால் அடித்து துன்புறுத்தினா்.கணவா் மணிகண்டன் மற்றும் தன் உறவினா்களான சின்னவன், தம்பி, ஆகியோா்வனப்பகுதியில் மரம் வெட்டும் வேலைக்கு சென்றபோது, அவா்களுக்கு பணத்துடன்பை ஒன்று கிடைத்ததாகவும் அதை மூவரும் பங்கிட்டு கொண்டதாகவும்,

இதுகுறித்து கேட்டு தன்னை கடத்தல்காரா்கள் துன்புறுத்தியதாகவும்கூறியுள்ளாா்.மேலும் சிகரலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த, ஆனந்தன், முனியப்பன், மஞ்சுஆகியோா் மீது சந்தேகமுள்ளதாகவும் கூறியுள்ளாா். முனிரத்னா கூறும்தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், இதுகுறித்து பேரிகைபோலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com