கிருஷ்ணகிரி அருகே புளியமரத்திலிருந்து தவறி விழுந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியை அடுத்த நாகன்கொட்டாயைச் சோ்ந்தவா் கென்னடி(62). தொழிலாளி. இவா், தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் ஏறி புளி உலுக்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கென்னடியின் மகன் முருகன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து உள்ளனா்.