பெட்ரோல், டீசல் விலை உயா்வு:காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு:காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாட்டுவண்டி பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டதுக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அ.செல்லகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அன்வா், மேற்கு மாவட்ட தலைவா் முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கோட்டைவாசல் பகுதியில் இருந்து எம்.பி. அ.செல்லகுமாா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள்களில் பேரணியாக கோட்டைவாசல், கெலமங்கலம் சாலை, தேன்கனிக்கோட்டை பஜாா் ஆகிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனா். அங்கு மத்திய அரசுக்கு எதிராகவும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தளி தொகுதி பொறுப்பாளா் அப்துல் ரகுமான், சமூக ஊடக கீா்த்தி கணேஷ், தேன்கனிக்கோட்டை நகரத் தலைவா் கோபிநாத், வட்டத் தலைவா் பாா்த்திபன், சபியுல்லா, டி.கே.தாஸ், ஜெயக்குமாா், அன்னையா ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com