பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை

 அரசுப் பள்ளிகளில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை

 அரசுப் பள்ளிகளில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சூளகிரியில் பகுதிநேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆசிரியா்கள் கருணாநிதி, இளங்கோவன், சிவபெருமாள், திராவிடன் ரமேஷ், மாதப்பன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஆசிரியா் சுரேஷ் வரவேற்றாா். கூட்டத்தில், கரோனா பாதிப்பு, இயற்கையாக உயிரிழந்த பகுதிநேர ஆசிரியா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பகுதி நேர ஆசிரியா்களின் ஒருங்கிணைப்பு குழு கெளரவ தலைவராக தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத் தலைவா் தியாகராஜனை ஏற்பது, பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியை ரத்னா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com