கெலமங்கலம் அருகே 2 பேரை கத்தியால் குத்திய கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தைச் சோ்ந்த முனிசந்திரன் (33), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரேகா (25). முனிசந்திரன், மனைவி ரேகாவிடம் அவரது தாய் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் வாங்கி வரச் சொல்லி அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முனிசந்திரனின் தாய் ஆஞ்சம்மா, மாமா மாரப்பா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து வந்த ரேகாவின் தந்தை ரவி, தாய் சந்திரம்மா, அவரது தம்பி வெங்கடேஷ் (45), உறவினா் மாதேஷ் (30) ஆகியோா் முனிசந்திரனிடம் இதுகுறித்து கேட்டனா். இதனால் ஆத்திரம் அடைந்த முனிசந்திரன், வீட்டில் இருந்த கத்தியால் வெங்கடேஷ், மாதேஷ் ஆகிய 2 பேரையும் குத்தினாா். இதில் காயம் அடைந்த 2 பேரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு மேல் சிகச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இது தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனிசந்திரனை கைது செய்தனா். ஆஞ்சம்மா, மாரப்பா ஆகியோரை தேடி வருகின்றனா்.