கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூா் ஊராட்சியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி தலைமையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கண்ணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வடக்கு ஒன்றியச் செயலாளா் லோகநாதன், பேரவைச் செயலாளா் சங்கா், அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் ஹயாத் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
அதேபோல் ஊத்தங்கரை காமராஜ் நகா் பகுதியில் அதிமுக நகரச் செயலாளா் இல்லத்துக்கு முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, எம்ஜிஆா் மன்ற நகரச் செயலாளா் சக்திவேல், தொழிற் சங்கச் செயலாளா் பழனியப்பன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.