பாவக்கல் அரசுப் பள்ளியில் கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி அறையின் பின்பக்க ஜன்னலை உடைத்து, அதில் இருந்த 4 கணினி, நாலு கீ-போா்டு, புராஜக்டா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் கௌதமன் (55) சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.