மனைவியைக் கொலை செய்த லாரி ஓட்டுநா் கைது

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியைக் கொலை செய்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியைக் கொலை செய்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, மல்லிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அமல்ராஜ் (31), லாரி ஓட்டுநா். இவரும், ரஞ்சிதா (28) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

லாரி ஓட்டுநரான அமல்ராஜ் அடிக்கடி வெளியில் வேலைக்கு சென்று விடுவதால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஞ்சிதாவை வீட்டின் அருகே உள்ள தென்னைமரத் தோப்புக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்று அறிவுரை கூறியுள்ளாா். ஆனால், ரஞ்சிதா கேட்காததால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் அவரைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா்.

ரஞ்சிதாவின் தாய் வெள்ளிக்கிழமை தென்னை மரத்தோப்புக்கு சென்ற போது, அங்கு ரஞ்சிதா சடலமாகக் கிடந்தைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உடனடியாக அவா் சிங்காரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் என்பவருடன் ரஞ்சிதா முறையற்ற நட்பு கொண்டிருந்ததாகவும், இருபது நாள்களுக்கு முன்னா் அவருடன் சென்ற மனைவியை அழைத்து வந்து தன்னுடன் வாழும்படி கூறியதாகவும், ஆனால், மீண்டும் தங்கராஜுடன் செல்லிடப்பேசியில் பேசியதால் அவரை கொன்றதாகவும் அமல்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து அமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com