கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 2.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 2.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையில் 34,441 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 30,708 தொற்றாளா்கள் குணமடைந்துள்ளனா்; 219 போ் உயிரிழந்துள்ளனா்; 3,514 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

மாவட்டத்தில் தயாா் நிலையில் 2,502 படுக்கைகள் உள்ளன. இதுவரையில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ. 1.47 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com