ராயக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள கல்லுகான் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (30). இவரது மனைவி முத்தம்மாள் (26). இவா்களுக்கு பவித்ரா (8), காவியா (7) என்ற மகள்களும், தனுஷ் (5) என்ற மகனும் உள்ளனா்.
குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முத்தம்மாள், சனிக்கிழமை தனது குழந்தைகள் காவியா, தனுஷ் ஆகியோருக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மருந்தை கொடுத்து, பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில், குழந்தைகளின் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள் காவியா, தனுஷ் ஆகிய இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.