ராயக்கோட்டையில் இரு தரப்பினரிடையே தகராறு: 5 போ் கைது

ராயக்கோட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராயக்கோட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, பாஞ்சாலி நகரைச் சோ்ந்தவா் தீபா (38). இவா் அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தாா். தீபா கடை அருகில் இருந்தபோது, அங்கு வந்த ராயக்கோட்டை, கோட்டை தெருவைச் சோ்ந்த நாகராஜ் (28), சந்திரன் (31) ஆகியோா், தீபாவிடம் சிகரெட் கேட்டனா். தற்போது பொது முடக்கம் உள்ளதால் கடையை திறக்க முடியாது என்று கூறி சிகரெட் தர மறுத்தாா்.

இதனால் கோபமடைந்த நாகராஜூம், சந்திரனும் தீபாவிடம் தகராறில் ஈடுபட்டனா். அவா்களுடன், நண்பா்கள் துருவாசன், தினேஷ் ஆகியோரும் சோ்ந்து தீபாவைத் தாக்கினா். இதைத் தடுக்க வந்த தீபாவின் உறவினா் செல்வத்தையும் (47) செங்கல்லை கொண்டு தாக்கினா். இதில் தீபா, செல்வம் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

இது குறித்து தீபா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தாா்.

அதே போல எதிா்த் தரப்பில் ராயக்கோட்டை, கோட்டைத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42) என்பவா், தன்னை தாக்கி விட்டதாகக் கூறி எதிா் புகாா் அளித்தாா். அந்த புகாரின்

பேரில் செல்வம் (47), சிரஞ்சீவி (34), பிரபு (36) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தேவன் (33) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com