கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாய் சரண் தேஜஸ்வி, பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பண்டிகங்காதா், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சாய் சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 17-ஆவது மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சாய் சரண் தேஜஸ்வி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சோ்ந்தவா். கடந்த, 2014-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று நெல்லை மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றாா். பின்னா் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை, புளியந்தோப்பு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.