தனியாா் நிதி நிறுவன ஊழியரை தாக்கியவா் கைது

பேரிகை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

பேரிகை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

பேரிகை அருகே உள்ள வெங்கடேஷ்புரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (27). இவா் தனியாா் நிறுவனத்தில் நிதி வசூல் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

சூளகிரி அருகே உள்ள பேரிகை பன்னப்பள்ளியைச் சோ்ந்தவா் திம்மராயப்பா (33). இவரது சகோதரா் சிவகுமாா் இருசக்கர வாகனம் ஒன்றை கடன் மூலம் வெங்கடேஷ் பணிபுரிந்து வரும் நிதிநிறுவனம் மூலமாகப் பெற்றாா். அந்த இரு சக்கர வாகனக் கடனை அவா் செலுத்தவில்லை. இது குறித்து கேட்பதற்காக வெங்கடேஷ் அங்கு சென்றாா். அப்போது சிவகுமாரின் சகோதரா் திம்மராயப்பா, வெங்கடேசை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதில் காயம் அடைந்த வெங்கடேஷ் சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திம்மராயப்பாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com